பிராணிகளிடம் இருந்து மனிதருக்கு நோய்கள் பரவுவதை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கொரோனா போல பல வியாதிகள் உருவாகும் என ஐ.நா., சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவு தலைவர் மார்டன் கப்பிலி தெரிவித்துள்ளார்.
கொரோனா போல் மேலும் பல வைரஸ்கள் தொற்றும்..!
இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த 1919ல் ஸ்வைன் ப்ளு வந்து மனித உயிர்களை பறித்தது. 100 ஆண்டுகள் கழித்து தற்போது கொரோனா பாதிப்பு வந்துள்ளது. இடையில் பல வைரஸ் தாக்குதல்களை உலகம் கண்டுள்ளது. கடந்த 1996ல் பேர்டு ப்ளு எனப்படும் பறவைக் காய்ச்சல் வந்தது. 1998ல் நிபா வைரஸ், 2003ல், சார்ஸ் நோய் 2016ல் சாட்ஸ் போன்ற தொற்றுகளை இந்த உலகம் கண்டுள்ளது.
தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி..!
இவை அனைத்தும் சீனாவின் குவாங்டங் மாகாணத்தில் பிராணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் தொற்றி உள்ளது. கொரோனா வைரஸும் அதேபோல் பிராணிகளிடம் இருந்து தான் பரவியுள்ளது. இத்தகைய பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் கொரோனா போல பிராணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு மேலும் பல வைரஸ்கள் தாக்கக் கூடும் என்று மார்டன் கப்பிலி தெரிவித்துள்ளார்.