சர்ச்சைக்குரிய பிரபல மாடல் மீரா மிதுன் ‘என் சாவுக்கு இவர்கள் தான் காரணம், அவர்களை தூக்கில் இடுங்கள்’ என ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்து பதிவு ஒன்று செய்துள்ளார்.
நடிகை மீரா மிதுன் ட்வீட்
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மீரா மிதுன் சில தமிழ்ப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே இவரை சுற்றி பலவித சர்ச்சைகள் எழுந்து வந்தது. பிக்பாஸ் வீட்டிலிருந்த ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் இவருக்கு பிரச்சனைகள் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது .
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னும், பலவிதமான சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வந்தார். இவரை வைத்தே பல யூடியூப் சேனல்கள் எல்லாம் சம்பாதித்துக்கொண்டு வந்தது. ஒவ்வொரு பிரபலங்களை குறித்தும் ஏதாவது சர்ச்சைக்குரிய விமர்சனங்களை கூறியே பிரபலமாகி வந்தார்.
அதில் நடிகர் விஜய் மற்றும் நடிகர் சூர்யாவும் அடக்கம். இந்நிலையில் மீண்டுமாக சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் மீரா மிதுன். குறிப்பாக பிரதமர் மோடிக்கு அந்த பதிவில் ஒரு வேண்டுகோளும் வைத்திருந்தார்.
பத்திரங்களில் கையெழுத்திட நேரடியாக செல்ல தேவையில்லை – ‘இ-கவர்னன்ஸ் சர்வீஸ் அமைப்பு’!!
மீரா மிதுன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘நான் தற்கொலைக்கான மனஅழுத்தத்தில் இருக்கிறேன். என்னுடைய மனஅழுத்தத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறேன். ஆனாலும் தொல்லைகள் குறையவில்லை. என்னுடைய மனநலம் கெட்டுவருகிறது. என்னுடைய சாவுக்கு எல்லாரும் காரணம். இவர்கள் எல்லாரையும் தூக்கிலிட வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.