அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மனு விசாரணை., ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!

0
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மனு விசாரணை., ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் காவேரி மருத்துவமனையில் சேர்த்து பை-பாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. இதன்பின் குணமடைந்தவரை புழல் சிறையில் அடைத்ததால் அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளனர். இதனால் சிகிச்சை செய்து வந்ததற்கான அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி இருந்தனர்.

அதன்படி இன்று (நவ.28) வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தற்போது பை-பாஸ் சர்ஜரி செய்து கொள்வது சாதாரணமாகிவிட்டது. இதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை மருந்துகளாலேயே சரி செய்யலாம் என Google-ல் தெரிவித்துள்ளது.” எனக்கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இது தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பினர், “மீண்டும் வழக்கமான ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும்.” என தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

சபரிமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்.., இனி இந்த வசதியும் உண்டு.., அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கர்நாடகா!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here