தமிழகத்தில் தற்போது தான் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. காரணம், ஆளும் கட்சியான அதிமுக கட்சி சார்பில் மக்களுக்கு இந்த தேர்தலுக்கு வாஷிங் மெஷின் வழங்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் களம்
மாநிலத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர உள்ளது. இந்த தேர்தலில் எப்படியேனும் ஜெயித்து விட வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக உள்ளது. அந்த வகையில் தற்போது கட்சி தலைவர்கள் அனைவரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் கூட்டணி கட்சிகள் குறித்து எந்த முடிவுகளையும் எந்த கட்சிகளும் எடுக்கவில்லை.
விவசாயிகள் போராட்டம் எதிரொலி – டெல்லி மெட்ரோ ரத்து!!
இப்படியான சூழலில் இந்த ஆண்டு தேர்தலில் முன்னணி நடிகரான கமல் ஹாசன் போட்டியிடவுள்ளார். அதற்கான அனைத்து முயற்சிகளிலும் அவர் இறங்கியுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க சில கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளையும் அறிவித்து வருகின்றது. அதில் ஆளும் கட்சியான அதிமுக பல புதிய சலுகைகளையும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதில் அதிமுக தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு வாஷிங் மெஷின் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இது குறித்து அனைத்து அமைச்சர்களும் அமைதி காத்து வந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இதற்கான பதிலை நிருபர்களுக்கு வழங்கியுள்ளார். மக்கள் அதிமுக வழங்க இருக்கும் தேர்தல் அறிக்கை குறித்த பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்தார்.