சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்துள்ளார்.
வன்முறை தடுக்கும் தினம்:
தற்போதைய காலகட்டத்தில் பொதுவாக இளம் பிஞ்சு குழந்தைகள் ஏதேனும் முறையில் மற்றவர்களால் துன்புறுத்தப்படுகிறார்கள். மேலும் சில நபர்கள் செய்யும் காரியத்தால் குழந்தைகள் இறக்க கூட நேரிடுகிறது. இந்நிலையில் சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது ஒரு குழந்தையை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்பப்படுத்தப்படுவது சட்டப்படி குற்றம். எல்லா குழந்தைகளையும் பாதுகாத்து, அவர்களின் கல்வி தரத்தை உயர்த்த உதவ வேண்டியது நமது எல்லோருடைய கடமை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்., நாளை மறுநாளே கடைசி நாள்! உடனே செய்து முடிங்க!!
மேலும் இது போன்ற கஷ்டங்கள் ஒரு குழந்தைக்கு தராமல் பாதுகாப்போம் என்றும் இப்படி ஒரு கஷ்டத்தை கொடுக்கும் நபரிடமிருந்து தப்பிக்க 14417,1098 இந்த எண்ணிற்கு அழைக்க வேண்டும் என்று ஒவ்வொரு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இப்படி செய்தால் குழந்தைகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க முடியும். மேலும் இது குறித்து ஒரு விழிப்புணர்வை கடை பிடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்