உலகம் முழுவதும் பெரும்பாலானோர் விரும்பும் ரயில் பயணத்தில் ஏராளமான வசதிகள் இருந்தாலும், அவ்வப்போது ஒரு சில காரணங்களால் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் சீனாவில் பெய்ஜிங் மாகாண சுரங்கப்பாதை ஒன்றில் உள்ள தண்டவாளத்தில் பனி படர்ந்திருந்தது. இதனால் அவ்வழியே வந்த மெட்ரோ ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பான தகவல் நிர்வாகத்திடம் கூறினார்களோ? இல்லையோ? எதிரே மற்றொரு மெட்ரோ ரயில் அதே தண்டவாளத்தில் வேகமாக வந்தது.
Enewz Tamil WhatsApp Channel
எதிரே நின்று இருந்த ரயிலை பார்த்தவுடன் பிரேக் அடிக்க, அது நிற்காமல் சறுக்கிக் கொண்டு சென்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 102 பயணிகளுக்கு எலும்பு முறிவும், 500 க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சரிவை சந்திக்காத காய்கறிகளின் விலை…, இப்போ ஒரு கிலோவே எவ்வளவுக்கு விற்குது தெரியுமா??