தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெண்களுக்கென பிரத்யேக இலவச பேருந்து சேவையை மாநில அரசுகள் அமல்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் மகளிர் இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தெலுங்கானாவில் ஆண்கள் மட்டுமே பயணிக்கக்கூடிய “Men Only” பேருந்து சேவையை அம்மாநில அரசு அமல்படுத்தி இருந்தது.
இதன்மூலம் கல்லூரி செல்லும் மாணவர்கள் படியில் பயணம் செய்வதை தவிர்க்கலாம் என குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் மிக குறைந்த அளவிலான மாணவர்கள் மட்டுமே இந்த பேருந்து சேவையை பயன்படுத்தி உள்ளனர். எனவே “Men Only” பேருந்து சேவை தொடங்கிய 2 நாட்களிலே அச்சேவையை தெலுங்கானா அரசு ரத்து செய்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.