தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தலைவர்கள் தினம், பண்டிகை போன்ற முக்கிய தினங்களில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் வருகிற மே 10ம் தேதி நடைபெற உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன் காரணமாக அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது ஆதரவாளர்களுக்கு ஓட்டு சேகரிப்பதற்காக வந்துள்ளதால் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மே 10ம் தேதி கர்நாடகா மாநிலத்திற்கு பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக மே 9 ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 13ம் தேதிகளிலும் விடுமுறை அறிவிப்பது குறித்து அந்தந்த தேர்தல் அலுவலர் முடிவு எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.