தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் மன்சூர் அலிகான். இவர் குறித்த சர்ச்சைகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வந்து கொண்டே தான் உள்ளது. அந்த வகையில் இன்று கூட மன்சூர் அலிகான் தனது கட்சி அலுவலகத்தில் தலைகீழாக கொடியேற்றியுள்ளார். இதை பலரும் சுட்டிக்காட்ட பின் மீண்டும் கொடியை சரியாக இயற்றினார்.
இதை வைத்து பலரும் மன்சூர் அலிகானை விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இவர் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதாவது இனி வரும் நாட்களில் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். தற்போது இவர் தமிழக அரசுக்கு வைத்துள்ள கோரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.