மலையாள திரையுலகில் பிரபலமாக இருப்பவர் நடிகை அம்பிளி தேவி. இவரும் சின்னத்திரை நடிகர் ஆதித்யன் ஜெயன் என்பவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நடிகை அம்பிளி தேவி தனது கணவர் மீது குடும்ப வன்முறை புகார் ஒன்றை அளித்து உள்ளார். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளார்.
மலையாள மொழியில் மிகுந்த வரவேற்பை பெற்ற படம் விஸ்வதுளசி. இந்த படத்தில் மம்முட்டி, நந்திதாதாஸ், மனோஜ் கே ஜெயன் போன்ற பல திரை பிரபலங்கள் நடித்து உள்ளார். இந்த படத்தில் நந்திதா தாஸ் அவர்களின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை அம்பிளி தேவி. அதற்கு முன்பும் பின்பும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் அவருக்கு புகழ் பெற்று தந்தது இந்த படம் தான் என்று கூறலாம். மேலும் இவர் கடந்த 2019அம் ஆண்டு சீரியல் நடிகர் ஆதித்யன் ஜெயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பிலிருந்து இவர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். இந்நிலையில் தற்போது நடிகை அம்பிளி தேவி தன் கணவர் ஆதித்யன் ஜெயன் மீது கேரள மாநிலம் கொல்லம் காவல் நிலையத்தில் குடும்ப வன்முறை புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதன் அடிப்படையில் ஆதித்யன் ஜெயன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் மலையாள திரையுலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்