சூப்பர் ஸ்டார் பட வில்லன் நடிகர் தூக்கிட்டு தற்கொலை – உடலை மீட்டு போலீசார் தீவிர விசாரணை!!

0
சூப்பர் ஸ்டார் பட வில்லன் நடிகர் தூக்கிட்டு தற்கொலை - உடலை மீட்டு போலீசார் தீவிர விசாரணை!!

பிரபல மலையாள வில்லன் நடிகர் என்.டி.பிரசாத் தனது 43 வயதில், தனது வீட்டிற்கு வெளியே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மலையாளத் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூக்கிட்டு தற்கொலை:

மலையாளத் திரையுலகில் புகழ்பெற்ற வில்லன் நடிகராக திகழ்ந்தவர் என்.டி.பிரசாத். 43 வயதான இவர் இபா, கர்மணி போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாள சூப்பர் ஸ்டார் நிவின்பாலி நடித்த, பிஜு என்ற படத்தில் அவருக்கு வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.

இவர் கடந்த ஜூன் 25ஆம் தேதி, கொச்சிக்கு அருகில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் தொங்கிய இவரது, உடலை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தூக்கில் தொங்கிய நடிகரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இவர் கடந்த சில தினங்களாக, குடும்பப் பிரச்சினையில் சிக்கி மன உளைச்சலில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இவர் போதைப்பொருள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இவரது திடீர் மரணம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here