இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில், நாளை (அக்டோபர் 14) ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருக்கிறது. உலக கோப்பைக்கு முன் தொடக்க விழா நடைபெறாத நிலையில், இந்த போட்டிக்கு முன்பாக பிசிசிஐ மற்றும் ஐசிசி கலை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருந்தது.
Enewz Tamil WhatsApp Channel
இதன் படி, இந்தியாவின் முன்னணி பாடகர்களான அரிஜித் சிங், சுக்விந்தர் சிங், சுனிதி சவுகான், நேஹா கக்கர், ஷங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். மேலும், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள இந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கு ரசிகர்கள் எப்படி வர வேண்டும் என்பது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
அதாவது,
- ரசிகர்கள் காலை 10 மணி முதல் மைதானத்திற்குள் நுழையலாம்.
- போட்டிக்கு முந்தைய நிகழ்ச்சி மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது.
- ரசிகர்கள் பர்ஸ், மொபைல் போன்கள், தொப்பி மற்றும் மருந்துகளை மட்டுமே எடுத்து வர வேண்டும்.
- GCA இலவச தண்ணீர் & மருத்துவ வசதியை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.