கடந்த சில தினங்களாக இஸ்ரேல் – ஹமாஸ் போர் அதிதீவிரமாகி வருவதால் பீரங்கி, வெடிகுண்டு என இரு பகுதிகளிலும் குண்டு மழை பொழிந்த வண்ணம் உள்ளது. இதுவரை இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இப்போர் இன்னும் பல நாட்களுக்கு நீடிக்க இருப்பதால், இஸ்ரேலில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
அந்த வகையில் இந்தியா திரும்ப விருப்பமுள்ளவர்கள் இந்திய தூதரக இணையதளத்தில், தங்களது சுய விவரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி இந்தியர்களை மீட்க “ஆபரேஷன் அஜய்” திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக தனி விமானம் இன்று (அக்டோபர் 13) இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 230 இந்தியர்கள் அழைத்து வர இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தனி விமானத்தில் பயணிக்க கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அழைத்து வரப்படுவதாக கூறப்படுகிறது. இஸ்ரேலில் கிட்டத்தட்ட 18,000 இந்தியர்கள் இருப்பதால், முன்பதிவை பொறுத்து ராணுவ விமானம், கப்பல் போக்குவரத்தையும் பயன்படுத்த தயாராக இருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.