பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்த மகேஷ்பாபு…!என்ன காரணம் தெரியுமா!!!

0

தெலுங்கு திரையில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு அவர்கள். அவர் இயக்குனர் நிதிஷ் திவாரி அடுத்ததாக இயக்க உள்ள ராமாயண கதையை மையமாக கொண்ட ராமாயணா 3டி படத்தில் தன்னுடைய தனிப்பட்ட கொள்கையின் காரணமாக நடிக்க மறுப்பு தெரிவித்து உள்ளார்.

மகேஷ் பாபு அவர்கள் தெலுங்கு திரைத்துறையில் ஒரு முன்னணி நடிகராக விளங்குபவர். இவரின் பல படங்கள் கோடியில் வசூல் சாதனை படைத்தவை. மேலும் பல நாட்கள் திரையில் ஓடிய சாதனையையும் படைத்தது உள்ளது. இந்நிலையில் இவருக்கு என்று ஒரு சில தனி கொள்கைகள் உள்ளன. அதாவது, பிற மொழி படங்களில் நடிப்பதில்லை, ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என்பது போன்றவை.

இவரின் இந்த கொள்கைகள் காரணமாக தமிழில் வெளியான சூப்பர் ஹிட் படங்களின் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை ஏற்க மறுத்து விட்டார். அந்த வகையில் தற்போது தங்கல் என்ற வெற்றி  படத்தை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் நிதிஷ் திவாரி. இவர் தற்போது இதிகாச கதையான ராமன் பிரான் மற்றும் சீதா தேவியின் கதையை ராமாயணா 3டி என்ற பெயரில் ஒரு 3டி படமாக எடுக்க முடிவு செய்து உள்ளார்.

அதில் சீதா கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனும், இராவணன் கதாபாத்திரத்தில் ஹிரித்திக் ரோஷனும் நடிக்க உள்ளனர். இந்நிலையில் ராமன் கதாபாத்திரத்தில் நடிக்க மகேஷ் பாபுவிடம்  கேட்டு அணுகி உள்ளனர். இந்த படம் முழுக்க முழுக்க ஹிந்தியில் வெளியாக உள்ளதால் இந்த வாய்ப்பை மகேஷ் பாபு தன் கொள்கையை சுட்டிக்காட்டி மறுத்து உள்ளார். மேலும் இதற்கு வேறு ஒரு காரணமும் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது இவர் ராஜமௌலியின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதால் இந்த படத்தை மறுத்திருப்பார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் படக்குழு ராமன் கதாபாத்திரத்திற்கு வேறு சில நடிகர்களை அணுகி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here