பூவே உனக்காக சீரியலில் என்ட்ரி ஆகும் புது நபர் – சீரியலில் உருவான புதிய ட்விஸ்ட்!!

0

பூவே உனக்காக சீரியலில் மகேஸ்வரி கிட்டத்தட்ட மாட்ட இருக்கும் நிலையில் எப்படியோ கதிர் போனில் வைத்த ப்ளூடூத்தை கண்டுபிடித்து விட அடுத்து வில்லத்தனமான யோசிக்கிறார்.

பூவே உனக்காக

பூவே உனக்காக சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்களுடன் நடந்து வருகிறது. மகேஸ்வரி பல வில்லத்தனமான வேலைகளை செய்து வருகிறார். பூவரசி வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையது இல்லை என்று கதிரை நம்ப வைத்து ஏமாற்றி இத்தனை நாள் கைக்குள் போட்டு வைத்தார்.

கடைசி நேரத்தில் கதிருக்கு உண்மை தெரிய வருகிறது. இதனால் உடைந்து போகிறார். இத்தனை நாட்கள் மகேஸ்வரி உடன் சேர்த்து கொண்டு என்னென்ன வேலைகள் செய்தோம் என்று பதறினார். எப்படியும் பூவரசியை காப்பாற்றியே ஆக வேண்டும் என்று மகேஸ்வரியின் போனில் ப்ளூடூத்தை வைத்தார்.

இதனால் அவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் கண்காணித்து வந்தார். இது ஒரு கட்டத்தில் மகேஸ்வரிக்கு தெரிந்து விடுகிறது. இந்த வேலையை செய்தது யார் என்ற கண்டுபிடிக்க வேண்டும் என்றும் மும்முரமாக திரிகிறார்.

இப்படி பல விறுவிறுப்பான கதையம்சத்துடன் சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் புதிதாக ஒரு நபரை அறிமுகப்படுத்த உள்ளனர். அதுவும் 1 மணிநேர எபிசோடாக ஒளிபரப்பாக உள்ளது. அது யார் என்று சஸ்பென்ஸாக வைத்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here