சென்னையை தொடர்ந்து மதுரையிலும் மெட்ரோ கட்டுமான பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் மெட்ரோ அமைப்பதற்கான சாத்தியக்கூறு சோதனைகளை மேற்கொண்டு வந்தனர். அதன்படி தற்போது மேப் தயாராகி உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சியில் உள்ள பல்வேறு கடைகளையும் அகற்ற, தமிழக அரசிடம் அனுமதி கேட்க உள்ளனர்.
அதன்பின் மத்திய அரசு ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, அடுத்த ஆண்டு இறுதியில் மெட்ரோ கட்டுமான பணி தொடங்கும். இந்த பணிகள், 3 வருடத்திற்கு பிறகு 2027 நிறைவு பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.