LPG சிலிண்டர் விலையை மாதந்தோறும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையில் ஏற்படும் மாற்றங்களை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஏழை எளிய குடும்பங்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் LPG சந்தாதாரர்கள் அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது LPG பயனாளர்கள் ஒவ்வொருவரும் E-KYC ஆவண சரிபார்ப்பை முடித்திருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் தங்களது சிலிண்டர் நிறுவனங்களிடம் ஆதார் ஆவணங்களையும் வழங்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. தற்போது இந்த பணிகளை அனைவரும் உடனடியாக விரைந்து முடிக்க வேண்டும் என்றும், இனிவரும் நாட்களில் இதை செய்ய காலம் தாழ்த்தினால் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.