சென்னையை தொடர்ந்து மதுரையிலும் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திருமங்கலம் to ஒத்தக்கடை வரை 76 உத்தேச வழித்தடத்தில் மண் எடுக்கும் பரிசோதனை அண்மை காலமாக நடைபெற்று வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதற்காக 100 க்கும் மேற்பட்டவர்கள் இயந்திரங்களை கொண்டு 500 மீட்டர் ஆழ்துளை இட்டு மண் மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். இதனை பரிசோதனை செய்ய ஹைதராபாத் ஆய்வகத்துக்கு எடுத்து செல்லப்பட்டு வருகிறது. இந்த பணி தொடங்கி 2 மாத காலங்கள் முடிவடைய உள்ள நிலையில் 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தளபதி 68 படத்தின் ஒன் லைன் இதான்.., விஜய்க்கும் எஸ்.ஏ.சிக்கும் செக் வைத்த வெங்கட் பிரபு!!
மேலும் குறிப்பிட்ட 75 நாட்களுக்குள் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு மதுரை வாழ் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.