மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் முதுகலை மாணவர் கோகுல், நேற்று முன்தினம் (டிச. 5) பணியில் இருந்தபோது, இளைஞர் பிரவீன் குமார் (வயது 28) நோயாளி குறித்து கேட்டுள்ளார். அந்த நோயாளி வார்டு மாற்றப்பட்டுள்ளதால் கோகுலுக்கு தெரியவில்லை. இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அரசியல் தலையீடுகள் இருந்ததால் நடவடிக்கை எடுக்க போலீசார் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் முதுகலை மாணவர்கள் மற்றும் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக பிரவீன் குமாரை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
மக்களே சட்டுபுட்டுன்னு வேலையை முடிங்க.., நாளை இந்த பகுதியில் பவர் கட்..,வெளியான முக்கிய அறிவிப்பு!!