வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வந்தது. தற்போது புயல் ஓய்ந்து இரு தினங்களாகி உள்ளதால் பல்வேறு குடியிருப்பு சாலைகளிலும் தேங்கி உள்ள மழைநீரை அகற்றி வருகின்றனர். அந்த வகையில் பள்ளிக்கரணையில் மீட்பு பணியில் ஈடுபட்ட போது 6 அடி ஆழ பள்ளத்தில் அருண் (வயது 29) இளைஞரின் சடலம் 3 நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இவரது தந்தை முருகன் என்பவர் காயிதே மில்லத் நகரில் உள்ள தனது வெள்ளம் சூழ்ந்த வீட்டை பார்க்க கடந்த டிச. 4 ஆம் தேதி சென்றார். இவரை தேடி பின்னாடியே சென்ற அருண் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர். இந்த சூழலில் மீட்பு பணியின் போது சடலமாக கண்டெடுக்கப்பட்டது, அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அரசு இராஜாஜி மருத்துவமனையில் தாக்கப்பட்ட மருத்துவ மாணவர்., போராட்டம் முற்றியதால் போலீசார் அதிரடி!!!