தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு விதிகள் அமலில் உள்ளது. இதன் காரணமாக பறக்கும் விமானத்தில் நடுவானில் திருமணம் செய்துகொண்ட மதுரை ஜோடியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நடுவானில் திருமணம்:
மதுரையை சேர்ந்த ராகேஷ் மற்றும் தீக்சனா, இவர்களுக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த பெற்றோர்கள் திட்டமிட்டு இருந்தனர். மேலும் தமிழகத்தில் ஊரடங்கு விதிகள் அமலில் உள்ளதால் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு முன் பதிவு செய்தனர்.
பின்னர் நேற்று காலை 7.30 மணியளவில் மணமக்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் 161 பேருடன் அந்த விமானம் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டது. அப்போது உறவினர்கள் முன்பு மணப்பெண்ண்ணுக்கு மணமகன் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.விமான பயணம் என்பதால் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் அந்த விமானம் தூத்துக்குடிக்கு சென்றுவிட்டு மீண்டும் காலை 9 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. இவ்வாறு பறக்கும் விமானத்தில் மதுரை ஜோடி தாலி கட்டிக் கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!