கடந்த 2015ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி 2019ஆம் ஆண்டு கட்டுமான பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதன்பிறகு இதுவரை கட்டுமான பணிகள் ஏதும் நடைபெறாமல் கிடப்பிலே இருந்து வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி வழக்கை விசாரித்த நீதிபதிகள், “எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட 36 மாத காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கட்டுமான பணியை முடிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பி இருந்தனர். இதையடுத்து மத்திய அரசு வழக்கறிஞர் சார்பாக கூறுகையில், “தற்போது டெண்டர் பணி கோரப்பட்டுள்ளதால், விரைவில் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்படும்.” என விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் வீரியமெடுக்கும் டெங்கு காய்ச்சல்., ஒரே நாளில் இத்தனை பேரா? சுகாதாரத்துறை எச்சரிக்கை!!!