நாட்டில் தொடர்ந்து ஆங்கங்கே பல குற்ற செயல்கள் நடந்து கொண்டே தான் உள்ளது. அந்த வகையில் கஞ்சாவை தட்டி விட்டதால் தந்தை ஒருவர் தனது குழந்தைகளுக்கு சூடு வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த டில்லி கணேஷ், யமுனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான இவர் தினமும் கஞ்சா வாங்கி வந்து வீட்டில் புகைத்து வந்துள்ளார். வழக்கம் போல் நேற்று இரவு டில்லி கணேஷ் வீட்டில் புகைத்து வந்ததாக தெரிகிறது. அப்போது அவரது இரு மகன்களும் விளையாடுவதற்கு ஆசைப்பட்டு ஓடி வந்து அவர் மீது ஏறும் போது கஞ்சா பொட்டலம் கீழே விழுந்தது. இதற்கு ஆத்திரமடைந்த கணேஷ் உடனே கரண்டியை பழுக்க காய்ச்சி இரு குழந்தைகளுக்கும் சூடு வைத்துள்ளார். இதனை தொடர்ந்து அழுது துடித்த குழந்தைகளை யமுனா மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், சிகிச்சை பார்த்த மருத்துவர்கள் போலீசில் புகார் கொடுத்து டில்லி கணேஷை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
தமிழகத்தில் வீரியமெடுக்கும் டெங்கு காய்ச்சல்., ஒரே நாளில் இத்தனை பேரா? சுகாதாரத்துறை எச்சரிக்கை!!!