மதுரை ஆவினில் பால் மற்றும் உபபொருட்கள் விற்பனையில் 13.71 கோடி முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக உதவி பொதுமேலாளர் உட்பட 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை ஆவினில் 5 பேர் சஸ்பெண்ட்
மதுரை ஆவினில் தினமும் பால் பாக்கெட் செய்து விற்பனை செய்யப்படுவது போக, தயிர், நெய்,வெண்ணை, போன்ற பல்வேறு உபபொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆவின் பொருட்கள் தரமானதக இருப்பதால் விற்பனையும் அதிகமாக உள்ளது,அதனால் இதன் உற்பத்தியும் அதிகமாக்க பட்டுள்ளது.இதனிடையே ஆவின் நிறுவனத்தில் கடந்த ஓராண்டாக பல்வேறு முறைகேடு மற்றும் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. குறிப்பாக உபபொருள் விற்பனையில் மட்டும் 13.71 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து நிர்வாக இயக்குனருக்கு பல புகார்கள் அனுப்பப்பட்டன.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
முதற் கட்ட ஆய்வில் மோசடி செய்திருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவந்தது. பின்னர் சென்னை ஆவினில் இருந்து வந்த அதிகாரிகள் கடந்த 10 நாட்களாக மதுரை ஆவினில் தணிக்கை செய்தனர். அதில் உபபொருட்கள் விற்பனையில் 13.71 கோடி ரூபாய் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, இது தொடர்பாக உதவி பொது மேலாளர் உட்பட 5 அலுவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.