உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பெரும் பாதிப்படைந்துள்ளது.கொரானாவுக்கு சரியான மருந்தை இன்னும் எந்த நாடும் கண்டுபிடிக்கவில்லை.தற்காலிகமாக தடுப்பூசிகள் மட்டுமே பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். அதிலும் 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே தடுப்பூசியை பயன்படுத்திய அரசு உத்தரவிட்டுள்ளது ஆனால் அமெரிக்காவில் 12 முதல் 15 வயதினரும் தடுப்பூசி போட அனுமதி.
குழந்தைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள உத்தரவு…
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இதுவரை 3 கோடி 30 லட்சத்தை தாண்டியுள்ளது.கொரோனா உருமாற்றம் இன்னும் மிகவும் பாதிப்படையச் செய்கிறது. உயிர் பாதிப்பு மட்டுமல்லாமல் பொருளாதார வீழ்ச்சியும் அடைந்துள்ளது.மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் கொரோனாவால் பெரிதும் பாதித்துள்ளது. அமெரிக்காவும் நோய்க்கான மருந்தை கண்டுபிடிப்பதில் மிகவும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.அமெரிக்க நாட்டை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான பைசர் அவசரகால பயன்பாட்டிற்காக தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.
அந்த தடுப்பூசியை 12 முதல் 16 வயதினரும் போட்டுக்கொள்ள அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகத்திடம் பைசர் நிறுவனம் ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக்கொண்டது அந்த தடுப்பூசியை பரிசோதித்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம் (FDA) இந்த தடுப்பூசி நல்ல பலனை அளித்து வருவதாக FDA அமைப்பினர் அறிவித்து பைசர் தடுப்பூசியை அவசர கால கட்டத்தில் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இன்னிலையில். உலக அளவில் முதன்முதலில் 12 முதல் 15 வயதுள்ள குழந்தை தடுப்பூசி போட்டுகொள்ளுவது இதுவே முதல்முறையாகும்.