இனி ஃபாரின் சரக்கு வீடு தேடி வரும் – அரசின் ஆன்லைன் டெலிவரி திட்டம்..!

0

வெளிநாட்டு மதுபான வகைகளை வீட்டிலிருந்தே ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளும் திட்டத்தை மத்தியப்பிரதேச அரசு செயல்படுத்தி உள்ளது.

வருமானத்தை அதிகரிக்க..!

மத்தியப்பிரதேச அரசின் 2020-21ம் ஆண்டுக்கான கலால் கொள்கையின் கீழ் இந்த ஆன்லைன் மதுபான டெலிவரி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசின் வருமானத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 2,544 உள்நாட்டு மதுபானங்கள் விற்கும் கடைகள் மற்றும் 1,061 வெளிநாட்டு மதுபானங்கள் விற்கும் கடைகளுடன் முந்தைய ஆண்டின் மதிப்பில் 25 சதவீதம் அதிகரித்து செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய கடைகள்..!

நாட்டின் திராட்சை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும், அதன் மூலம் தயாரிக்கப்படும் வைன் மதுபான விற்பனையை ஊக்குவிக்கவும் புதிய கடைகள் திறக்கப்படும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுவகைகளுக்கென இரண்டு குழுக்களாக மது விற்பனைக் கடைகள் இந்தூர், போபால், குவாலியர் மற்றும் ஜபல்பூர் ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்பட உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here