தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் முழு ஊரடங்கு? தலைமை செயலாளர் ஆலோசனை!!

0

தமிழகத்தில் அதிவேகத்தில் இருந்து வரும் கொரோனா தொற்றினை குறைப்பதற்காக தமிழக அரசு பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 6 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக கொரோனா தொற்றிற்கு 16,665 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் நேற்று ஒரே நாளில் 98 பேர் தொற்று காரணமாக தமிழகத்தில் தங்களது உயிரை இழந்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தேனி மற்றும் திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்று அதிகமான அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த 6 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை ஆட்சியர் ராஜிவ் ரஞ்சன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

மே 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அதிரடி!!

இந்த ஆலோசனையில் இந்த 6 மாவட்டங்களில் கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு குறித்தும், கொரோனா பாதிப்பு குறித்தும் ஆலோசனை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வரும் நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுவதால், இந்த கூட்டம் முக்கியமானவையாக காணப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here