கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மராட்டியத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தற்போது இதனை நீடிப்பதாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஊரடங்கு நீட்டிப்பு:
கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மக்களிடையே மிக அதிகமான அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு விதிமுறைகளை விதித்து வருகின்றனர். மேலும் தற்போது தடுப்பூசி பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது இந்தியாவிலே மிக அதிகமான அளவில் மராட்டிய மாநிலத்தில் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த மராட்டிய மாநிலத்தில் வருகிற ஏப்ரல் 30ம் தேதி வரை இரவு நேர மற்றும் வார இறுதி நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று ஏற்கனவே அந்த மாநிலத்தின் முதல்வர் அறிவித்தார்.
150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு – மத்திய சுகாதாரத்துறை அதிரடி!!
தற்போது அங்கு தொடர்ந்து மிக அதிகமான அளவில் தொற்று கண்டறியப்பட்டு வருவதால் அங்கு மேலும் புதிய ஊரடங்கை 15 நாட்கள் அதிகரிக்க அமைச்சரவை கூட்டத்தில் அனைவரும் குரல் எழுப்பினர். தற்போது இதன் காரணமாக மீண்டும் ஏப்ரல் 30ம் தேதிக்கு அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று விதிக்கப்பட்டுள்ளது.