ராதிகாவின் மகளை வீட்டிற்கு அழைத்து செல்லும் பாக்கியா – மாட்டிக்கொள்வாரா கோபி!!

0

விஜய் தொலைக்காட்சியில் தற்போது மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” சீரியலின் முக்கிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவை அடுத்து கதை இனி விறுவிறுப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“பாக்கியலட்சுமி” சீரியல்

விஜய் டிவியில் தற்போது அனைத்து சீரியல்களும் பல விறுவிறுப்பான ட்விஸ்டுகளுடன் சென்று கொண்டு இருக்கின்றது. குறிப்பாக, “பாக்கியலட்சுமி” சீரியல் தான் வேற லெவல் ட்விஸ்டுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கோபி மற்றும் ராதிகா இருவருக்குமான உறவினை எழில் கண்டுபிடித்து விடுகிறார். இது குறித்து அவர் தனது அப்பாவை மிரட்டியும் வைக்கிறார். ஆனால், எழில் முன்பு சரி என்று கூறும் கோபி ராதிகாவை பார்க்க மீண்டும் செல்கிறார். இப்படியாக இருக்க, தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் முழு ஊரடங்கு? தலைமை செயலாளர் ஆலோசனை!!

அதில், ராதிகாவை காண பாக்கியா செல்கிறார். அவர் கோபியையும் ராதிகாவை பார்க்க வர சொல்கிறார். ஆனால், கோபி மறுத்து விடுகிறார். பின், பாக்கியா ராதிகாவை காண செல்கிறார். இருவரும் பேசி கொண்டு இருக்கும் போது ராதிகா ராஜேஷ் குறித்தும் அவர் வீட்டில் வந்து சண்டையிட்டது குறித்தும் கூறுகிறார். இதனால் பாக்கியாவிற்கு என்னவோ போல் ஆகி விடுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பாக்கியா இருவரையும் தங்கள் வீட்டிற்கு வர சொல்கிறார். ராதிகா மறுத்து விடுகிறார். பின், அவர் மயூரியை மட்டுமாவது அனுப்புங்கள் என்று கூறுகிறார். ராதிகாவிற்கும் சரி என்று பட மயூரியை அனுப்பி விடுகிறார். இத்துடன் ப்ரோமோ முடிந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here