இந்த ஆண்டு கோடைக் காலத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தளங்கள் பலவும் பயணிகளால் நிறைந்து வழியத் துவங்கியுள்ளது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளமான ஊட்டிக்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்போது, ஒவ்வொரு ஆண்டும் வழக்கம் போல நடத்தப்படும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவின் மலர்க் கண்காட்சி இந்த ஆண்டும் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி வரும் மே மாதம் 19 ஆம் தேதி துவங்கி 23 ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு நடைபெற இருக்கிறது.
‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’…..,மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய சாதனை…..,
இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது, ஊட்டியில் நடத்தப்படும் மலர் கண்காட்சியை முன்னிட்டு மே 19 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.