அரசாங்கம் நடத்தும் மதுபான கடைகளில் இருந்து மாநில அரசுக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. மேலும் தூய்மையற்ற சாராயங்களை மதுபிரியர்கள் குடித்து உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் வந்துவிட கூடாது என்ற நோக்கத்தில் அரசு மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. ஆனால் பொதுமக்கள் கூட்டம் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் இந்த டாஸ்மாக் கடைகள் இயங்க கூடாது என கட்டுப்பாடு உள்ளது.
இப்படி இருக்கையில் தற்போது மது பிரியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை புதுவை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது ஜனவரி 25 ஆம் தேதி வள்ளலாரின் தினத்தையொட்டி மதுபானக் கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தினத்தில் சாராய கள்ளுக்கடைகள் சட்டத்திற்கு மீறி வைக்க கூடாது, அப்படி உத்தரவை மீறுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என காவல்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.