விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயமான சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் மலை கோவிலில், மாதந்தோறும் பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதில் பக்தர்கள் கலந்து கொள்ளும் வகையில் 4 நாட்களுக்கு மட்டும் மலையேற அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் தொடர் மழை காரணமாக, கடந்த 2 மாதங்களாக பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் தை மாத பிரதோஷ தினமான இன்று (ஜன.23) முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே பக்தி பரவசத்தோடு மலையேறி வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்., இந்த நாளில் மதுபான கடைகள் இயங்க தடை., மீறுவோர் மீது நடவடிக்கை!!!