தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் மதுபான கடை ஊழியர்களுக்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் ஒரு சில இடங்களில் இன்றளவும் ஊழியர்கள் விதி மீறல்களில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர். அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு புதுச்சேரி கொட்டுப் பாளையத்தில் உள்ள தனியார் டாஸ்மாக் கடையில், பீமாராவ் என்பவர் 2 பீர் வாங்கியதில், அது காலாவதி ஆகி உள்ளதாக தேதி குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், பீமாராவ் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்துள்ள நிலையில், காலாவதியான பீர் விற்பனை செய்த தனியார் மதுபான கடைக்கு ரூ.75,000 அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
TNPSC தேர்வாணையத்துக்கு 5 உறுப்பினர்கள் நியமனம்.., யார் யார் தெரியுமா?? முழு விவரம் இதோ!!!