இந்தியாவில் பல ஆண்டுகாலமாக வேறு பாலினத்தவர்கள் திருமணம் செய்வது தான் நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது காலம் மிக வேகமாக ஓடி கொண்டிருக்கும் சூழலில் நாம் அனைவரும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்த அறிவியல் உலகில் வாழ்ந்து வருகிறோம். கடந்த 2018ம் ஆண்டு தன் பாலின உறவை குற்றமற்றது என உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதனால் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது.
இது ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது தன்பாலினம் தொடர்பாக கிரீஸ் நாடாளுமன்றத்தில் ஓர் நிறைவேற்றம் அரங்கேறி உள்ளது. அதாவது தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தன்பாலின ஜோடிகளுக்கு அதிகாரம் வழங்கிய முதல் கிறிஸ்தவ நாடு என்ற பெருமையை கிரீஸ் பெற்றுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் உலகம் அழிவை நோக்கி செல்கிறது என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன.
Enewz Tamil WhatsApp Channel
மதுபிரியர்களே உஷார்., கடையில் இந்த பீர் விற்பனை செய்ததால் அபராதம்., வெளியான முக்கிய தகவல்!!!