நாட்டின் முக்கிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி -க்கு இதுவரை இல்லாத வகையில் புதிதாக தனியார் துறையைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரை CEO வாக நியமிக்க, பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
எல் ஐ சி க்கு சிஇஓ :
நாட்டின் மிக முக்கியமான பொதுத்துறை நிறுவனமாக எல்ஐசி திகழ்ந்து வருகிறது. நாடு முழுவதும் 2000க்கும் மேற்பட்ட கிளைகளுடன், 13 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏஜென்ட்களுடன் பழமையான நிறுவனமாக இந்த எல்ஐசி திகழ்ந்து வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு பிரிமியம், லைஃப் இன்சூரன்ஸ் பிளான், விபத்து மற்றும் சேமிப்பு கால காப்பீடு மற்றும் பென்ஷன் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த எல்ஐசி வழங்கி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
சமீபத்தில் எல்ஐசி, தங்கள் பயனர்கள் வாட்ஸ் அப்பிலேயே, தங்கள் எல்ஐசி குறித்த சேவையை தெரிந்து கொள்ள, அதிரடி அப்டேட் ஒன்றை அமல்படுத்தியது. தற்போது, எல்ஐசி-யை டாப் ரேஞ்சுக்கு கொண்டு செல்ல, தனியார் துறையைச் சார்ந்த நிர்வாகி ஒருவரை சிஇஓவாக பணியமர்த்த அரசு திட்டம் போட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், அரசின் இந்த திட்டம் செயல்முறைக்கு கொண்டுவரப்பட்டால் எல்ஐசி நிர்வாகம் டாப் ரேஞ்சுக்கு செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.