கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் சேதுராமன், 2 ஆண்டுகளுக்கு முன் இறந்ததை நினைத்து அவரது மனைவி தற்போது சோகத்துடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
கதறிய மனைவி :
தமிழ் சினிமாவில், நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் முன்னணி நடிகராக அறிமுகமானவர் சேதுராமன். இந்த படம் போக சக்க போடு போடு ராஜா, வாலிப ராஜா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சரும பிரச்சனை பிரச்சனையில் மருத்துவ கல்வி முடித்துள்ள இவர் பிரபல மருத்துவராகவும் திகழ்ந்து வந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இவருக்கு திருமணமாகி, ஒரு குழந்தை இருந்தது. இதை அடுத்து யாரும் எதிர்பாராத விதமாக இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம், மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இந்த நிலையில் உயிரிழந்த நடிகர் சேதுராமனின் மனைவி உமா, தன் கணவர் பயன்படுத்திய சென்ட் பாட்டில் போட்டோவை பகிர்ந்து, உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதாவது நீங்கள் என்னுடன் எப்போதும் இருப்பதை இது ஞாபகப்படுத்துகிறது. நீங்கள் இல்லாத என் வாழ்க்கையை, இன்னும் என்னால் நம்ப முடியவில்லை என தன் கணவர் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram