வங்கக்கடலில் உண்டான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மாண்ட்ஸ் புயலாக உருவெடுத்து சென்னையை நோக்கி வடமேற்கு திசையில் 60 முதல் 80 கி.மீ. வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. மேலும் இன்று இரவு மாண்ட்ஸ் புயல் வலுப்பெற்று தமிழக கடற்கரை பகுதியை கடக்க உள்ளதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால், சென்னை மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரை பகுதிகளில் மீனவர்களும், பொதுமக்களும் செல்ல தடை விதித்துள்ளது. மேலும், கடுமையான காற்று வீச படுவதாலும் மோசமான வானிலை நிலவுவதாலும் சென்னை விமான நிலையங்களில் விமானங்களை ரத்து செய்துள்ளது.
யோகிபாபுவின் “மலை” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..,கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
இதைத்தொடர்ந்து இன்று இரவு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் என 6 மாவட்டங்களிலும் அரசு பேருந்துகள் இயக்கப்படாது என்று தெரிவித்துள்ளது. மேலும், வெளி இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கவும், புயல் நாளை இரவு கரையை கடக்க உள்ளதால் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.