நாடு முழுவதும் மக்களின் பாதுகாப்பு கருதி இரவு பகல் பாராமல் உழைத்து வரும் காவலர்களுக்கு பல்வேறு வசதிகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் உரிய நேரத்தில் விடுப்பு கிடைக்காமல் மக்களுக்காக பாதுகாப்புக்காக உழைத்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் காவலர்களுக்கு திருமண நாள், பிறந்த நாள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின் போது விடுமுறை வழங்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மேலும் மாநிலத்தில் காவல்துறையில் காலியாக உள்ள 60 S.I. பணியிடம், 500 ஊர்க்காவல் படை மற்றும் 26 வாகன ஓட்டுனர்கள் என அனைத்தையும் நடப்பு ஆண்டு இறுதிக்குள் நிரப்பப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் இளைஞர்களிடையே அதிவேகமாக பரவி வரும் போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க விற்பனை செய்பவர் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து புதுச்சேரி உட்பட மற்ற மாநில காவல் அதிகாரிகளும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.