கொடைக்கானலை சுற்றிப் பார்க்க நாளை (செப்.9) முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலக்ஷ்மி அறிவித்து உள்ளார். இருப்பினும் இ-பாஸ் கட்டாயம் உள்ளிட்ட சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சுற்றுலாவிற்கு அனுமதி:
கொரோனா ஊரடங்கு காரணமாக அதிகளவு பாதிக்கப்பட்ட துறைகளில் முக்கியமானது சுற்றுலாத்துறை. இதனால் பல மாவட்ட அரசுகளுக்கு வருமானம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ள அன்லாக் 4.0 வழிகாட்டுதல்களில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன. இதனால் பல மாவட்ட சுற்றுலாத் துறைகள் மீண்டும் இயங்க தொடங்கி உள்ளன. இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய மலை சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் செப்டம்பர் 9ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலக்ஷ்மி அறிவித்துள்ளார்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
பப்ஜி விளையாட 2 லட்ச ரூபாய் செலவு – தாத்தாவின் பென்சனில் கை வைத்த 15 வயது சிறுவன்!!
மேலும் திண்டுக்கல் மாவட்ட (உள்) பயணிகளுக்கு அடையாள அட்டையும், வெளிமாவட்ட பயணிகளுக்கு இ-பாஸ் உள்ளிட்டவை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொடைக்கானலில் புகழ்பெற்ற பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஸ் பூங்கா ஆகிய சுற்றுலா தலங்கள் முதற்கட்டமாக திறக்கப்படும் என ஆட்சியர் விஜயலக்ஷ்மி அறிவித்து உள்ளார்.