முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அவ்வப்போது அரசுத் துறைகளில் பணியாற்றும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலாளராக கிர்லோஷ்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
முன்னதாக, ஆளுநர் என்.ஆர்.ரவியின் செயலாளராக பதவியில் இருந்த ஆனந்த பாட்டீல் என்பவர் மத்திய அரசுத் துறைக்கு மாற்றப்பட்டதை அடுத்து அந்த பதவி காலியாக இருந்தது. இதையடுத்து தமிழக அரசின் பல்வேறுத் துறைகளில் பணிபுரிந்த ஐஏஎஸ் அதிகாரி கிர்லோஷ்குமார் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பையின் இந்த ஆட்டத்தில் இருந்து விலகும் விராட் கோலி…,ஒருவேளை இருக்குமோ!!