தமிழகத்தில் மண்ணெண்ணெய் அளவை குறைத்த மத்திய அரசு – பாதிக்கப்படும் குடும்ப அட்டைதாரர்கள்!!

0

அனைத்து மாநிலங்களிலும் குடும்ப அட்டை தாரர்களுக்கு குறைந்த விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மாநில அரசிற்கு மத்திய அரசு வழங்குகிறது. இந்நிலையில் தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் வழங்கும் அளவை தற்போது மத்திய அரசு குறைத்துள்ளது.

மண்ணெண்ணெய்

நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் மக்களுக்கு பயனடையும் வகையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு மாநில அரசு குறைந்த விலையில் அரிசி, பருப்பு போன்ற சமையலுக்கு தேவைப்படும் பொருட்களை வழங்கி வருகிறது. மேலும் பண்டிகை காலம் என்றால் அதற்கு சிறப்பு பரிசு பொருட்களும் வழங்கி வரும். அதுமட்டுமல்லாமல் சமையல் அடுப்பிற்கு பயன்படும் மண்ணெண்ணெய்யும் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் இதனை மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது. மாநில அரசு இதனை மக்களுக்கு வழங்கி வருகிறது. ஆனால் இதில் சில கட்டுப்பாடுகள் உள்ளது. அது என்னவென்றால் குடும்ப அட்டை தாரர்கள் 2 காஸ் சிலிண்டர் வைத்திருந்தால் அவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படமாட்டாது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது ஒரு குடும்ப அட்டை தாரருக்கு 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்த அளவிற்கு பிரபலமாக இவர் தான் காரணமா?? வைரலாகும் புகைப்படம்!!

ஆனால் தற்போது மத்திய அரசு தமிழகத்திற்கு மிக குறைந்த அளவிலான மண்ணெண்ணெய்யை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது தமிழகத்தில் மொத்தமாகவே 20% மண்ணெண்ணெய் தான் வழங்கப்படுகிறது என்று உணவு பொருட்கள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. இதனால் கிராமபுற மக்களுக்கு கடந்த சில நாட்களாகவே அரை லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

இதனால் மக்கள் அனைவரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது இதுகுறித்து உணவு வழங்கல் துறை நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் மண்ணெண்ணெய் அளவு குறைந்தது குறித்து குடும்ப அட்டை தாரர்கள் மற்றும் மக்களை அறியும் வகையில் விளம்பரம் படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here