குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதனை சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம்:
தமிழகத்தில் இன்று(ஏப்ரல் 14) உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதியில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நாளை(ஏப்ரல் 15) தமிழக உள்மாவட்டங்களில் பெரும்பாலுமான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் கடலோர பகுதி, புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, தேனி, திண்டுக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது. வருகிற 16.04.2021 அன்று தென் தமிழகம், உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.
மேலும் வருகிற 17.04.2021 மற்றும் 18.04.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தமிழக உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரம் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலையாக 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கோத்தகிரி 11செ.மீ., எடப்பாடி 8செ.மீ., ஆரணி, சோலையார் தலா 5செ.மீ., வாலிநோக்கம், கொடநாடு தலா 4செ.மீ., கயத்தாறு, மேட்டூர், பெருஞ்சாணி அணை, தாத்தையங்கார்பேட்டை, சின்னக்கல்லார், தோண்டி, குழித்துறை தலா 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. கடலுக்குள் செல்ல மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை.