அரசு சம்பந்தப்பட்ட கோப்புகளில் அதிகாரிகள், ஆங்கிலத்தில் எழுதக் கூடாது என்றும் மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில முதல்வர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
முதல்வர் எச்சரிக்கை:
அரசு சம்பந்தப்பட்ட கோப்புகளில், அந்தந்த மாநிலத்தின் தாய்மொழி குறிப்பிடப்படுவது வழக்கம். ஒரு சில நேரங்களில், பொது நலன் கருதி கோப்புகள் ஆங்கிலத்தில் வெளியிடப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநிலத்தில் அரசு சம்பந்தப்பட்ட கோப்புகள் இனி மலையாள மொழியில் மட்டுமே இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனை மீறி கோப்புகளில் ஆங்கிலத்தில் எழுதுவது, மாநில மக்களின் உரிமையை தட்டி பறிக்கும் செயலாகும் என தெரிவித்தார். இனி அதிகாரிகள் அரசு சார்ந்த கோப்புகளில், கேரளாவின் தாய்மொழியான மலையாளத்தை மட்டுமே இடம் பெறச் செய்ய வேண்டும். இதனை மீறி ஆங்கிலத்தில் எழுதினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
சென்னையை மிரட்டும் ‘மெட்ராஸ் ஐ’.,, மருத்துவமனையில் அலைமோதும் மக்கள் கூட்டம்!!
சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு, இந்த நடவடிக்கை சார்ந்த முடிவுகளை எடுக்க முழு சுதந்திரம் வழங்கப்படுவதாக முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார். கேரள முதல்வரின் இந்த திடீர் உத்தரவு, அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.