பங்களாதேஷுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசமாகியது.
IND vs BAN:
பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய அணி டி20 உலக கோப்பை போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பவுலிங்கை தேர்வு செய்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், ரோஹித் சர்மா 2 ரன்களில் வெளியேற, கே எல் ராகுல் (50), சூர்யகுமார் யாதவ் (30) என சீரான இடைவெளியில் பெவிலியன் திரும்பினர். விராட் கோஹ்லி மட்டும் ஒரு புறம் நிலைத்து நிற்க, ஹர்திக் பாண்டியா(5), தினேஷ் கார்த்திக் (7), அக்சர் படேல் (7) என அடுத்தடுத்து வெளியேறினர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனால், இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோஹ்லி (64*) மற்றும் அஸ்வின் (13*) களத்தில் இருந்தனர். 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்களை எடுத்திருந்தது. இதற்கிடையில் மழை குறுக்கிட்டதால் போட்டியானது ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
T20 வேர்ல்ட் கப்.., தொடர்ந்து அதிரடி காட்டி வரும் இந்திய வீரர்.., முதலிடம் பிடித்து அசத்தல்!!
சிறிது நேரத்தில், மழையின் தாக்கம் குறைந்த பின், இந்த போட்டியானது, 16 ஓவரில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என நிர்ணயிக்கப்பட்டது. ஏற்கனவே பங்களாதேஷ் 7 ஓவரில் 66 எடுத்த நிலையில், மீதம் 9 ஓவரில் 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் களமிறங்கியது. இதில், பங்களாதேஷ் அணி 16 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து, 146 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதனால், இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசமாகியது.