இந்தியாவில் கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில், முதன் முதலாக திருநம்பி குழந்தையை பெற்றெடுத்த செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வெளியான செய்தி:
சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக திருநங்கை திருநம்பி ஜோடி குழந்தை பெற்றுக் கொள்ள உள்ள செய்தி, பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சார்ந்த திருநம்பி சஹத்-திருநங்கை ஜியா பாவல் ஜோடி கடந்த 3 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஹார்மோன் குறைபாட்டால், திருநம்பியாக மாறிய சஹத் செயற்கை கருத்தரிப்பு முறையில் முதல் முறையாக கர்ப்பம் தரித்தார். இந்த நிலையில், இன்று காலை 9.30 மணி அளவில் அறுவை சிகிச்சை முறையில் திருநம்பி குழந்தையை பெற்றெடுத்தார். தன் குழந்தையின் கையைப் பிடித்தபடி, ஜியா சோசியல் மீடியாவில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.
தொடர்ந்து இந்த குழந்தை ஆணா? பெண்ணா? என கேள்வி எழுப்பப்பட்ட போது, குழந்தை வளர்ந்து பெரிதான பிறகு இதற்கான பதில் தெரிய வரும் என இந்த குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த வினோத பாலின தம்பதிக்கு, அவர்கள் சமூகத்தைச் சார்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்