கேரளாவில் மீரா மிதுன் மீது ஜாமின் பெற முடியாத வழக்கு பதிவு – அடித்து இழுத்து செல்ல ரெடியான போலீஸ்!!

0
meera mithun
meera mithun

பிக் பாஸ் மூலம் மக்களுக்கு பரிட்சயம் ஆன மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டை விட்டு சர்ச்சைக்குரிய பல விடீயோக்களை வெளியிட்டார் . மேலும் விஜய் மற்றும் சூர்யாவின் குடும்பத்தினரையும் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார். தற்போது மலையாளிகளை மோசமாக வீடியோ வெளியிட்டதால் அவர் மீது ஜாமீன் இல்லாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது .

மீரா மிதுன்

2016 ஆண்டு சவுத் இந்தியா அழகி பட்டத்தையும், மிஸ் குயின் இந்தியா பட்டத்தையும் பெற்றவர் மீரா மிதுன். இவர் தமிழில் சில படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்தவர். ஆனால் பிக் பாஸ் மூலமே மக்களுக்கு இவரை தெரியும். பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே இவர் மீது பல குற்றசாட்டுகள் போடபட்டது. மேலும் சேரனுக்கும் மீரா மிதுனுக்கும் பல பிரச்சனைகள் ஏற்பட்டது.

meera mithun
meera mithun

இந்நிலையில் அவர் சூப்பர் மாடல் என்றும் சொல்லிக்கொண்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மீரா மிதுன் பல சர்ச்சைக்குரிய விடீயோக்களை வெளியிட்டார், மேலும் பல ஆபாசமான புகைப்படங்களையும் வெளியிட்டார். அதனை தொடர்ந்து விஜய் மற்றும் அஜித் தனது வளர்ச்சியை பார்த்து பொறாமை படுவதாகவும் கூறி அனைவரையும் கடுப்பேத்தி வந்தார். ஆனால் அவர்களோ அதனை கண்டுகொள்ள கூட இல்லை.

meera
meera

கொஞ்ச காலமாக காலமாக அமைதியாக இருந்த மீரா மிதுன் இடையில் மலையாளிகளை பற்றி அவதூறாக பேசி விடியோவை வெளியிட்டார். இதனால் கேரளாவில் மீரா மிதுன் மீது ஜாமின் பெற முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்திகள் வெளியானதில் கேரளாவை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் மீரா மிதுன் மீது வழக்கு தொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here