மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள், youtube மூலம் அதிக சந்தாதாரர்களைக் கொண்டிருக்கவும், அதன் மூலம் பணம் திரட்டவும் தடை விதிப்பதாக கேரளா அரசு அறிவித்துள்ளது.
அரசு அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கு சில மாநிலங்களில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கேரளாவில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட அனுமதிக்க முடியாது என உத்தரவிடப்பட்டுள்ளது. தொழிலாளர் நடத்தை விதிகள் 1960 ன் படி இது சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஊழியர்கள் தங்கள் தனிப்பட்ட, விஷயங்களை இதில் மேற்கொள்ளலாம், ஆனால் youtube மூலம் அதிக சந்தாதாரர்களை வைத்து தனியாக பணம் திரட்டுவதை அனுமதிக்க முடியாது என விளக்கமளித்துள்ளது.
B. Ed மாணவர்களே கவனம்.,4 கட்டமாக நடக்கும் செய்முறை தேர்வு! தேதியுடன் வெளியான அறிவிப்பு!!
தற்போது ஊழியர்கள் youtube கணக்கு வைத்திருந்தால் உடனடியாக அதை முடக்க வேண்டும் என்றும், மீறினால் கடும் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்துள்ளது. அரசு ஊழியர்கள் சோசியல் மீடியாவில் மூழ்கிக் கிடந்த தங்கள் நேரத்தை விறயப்படுத்துவதை தவிர்க்கவும், சில ரகசியங்கள் வெளியே செல்லாமல் காக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கேரளா அரசு தெரிவித்துள்ளது.