தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இத்தனை நாள் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் தென்மேற்கு மழையால் பல பகுதிகளில் குளிர்ச்சி நிலவுகிறது. ஆனால் மகாராஷ்டிரா, கேரளாவில் இடைவிடாத மழை கொட்டி தீர்த்து வருவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு கூட மிகவும் சிரமப்படுகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் கேரள மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கண்ணூர், இடுக்கி எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த கனமழையால் ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளையும் கண்ணூர், இடுக்கி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், மற்ற மாவட்டங்களுக்கு அலர்ட்டும் விடுத்துள்ளது.
செந்தில் பாலாஜியை விடுதலை செய்ய நீதிபதி உத்தரவு? வெளியான முக்கிய அறிவிப்பு!!!
இதனால் நாளையும் எர்ணாகுளம், கண்ணூர், இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொழில் கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைவிடாத மழையால் அனைத்து சுரங்கப் பணிகளும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.