டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, கடந்த 21ஆம் தேதியன்று அமலாக்கத்துறை கைது செய்தது. இதைத்தொடர்ந்து மார்ச் 28ஆம் (இன்று) தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில், மீண்டும் ஒரு வாரத்திற்கு காவலை நீட்டித்து, அடுத்த விசாரணை ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தோனி, கோலி சேர்ந்தா எப்பவும் மாஸ் தான்.. CSK vs RCB போட்டி படைத்த சாதனை.. முழு விவரம் இதோ!!
மறுபுறம் ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளதால், பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பொதுநல மனு விசாரிக்கப்பட்டது. அதில், “இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆளுநர், ஜனாதிபதி தான் முடிவு செய்ய முடியும்.” எனக் கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.