நடப்பு ஆண்டில் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட, குஜராத் மாநிலத்தை சேர்ந்த கஷ்மா பிந்து, முதல் முறையாக கர்வா சௌத் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.
கஷ்மா பிந்து:
இந்தியா முழுவதும் கடந்த அக்டோபர் 13 அன்று, பெண்களால் “கர்வா சௌத்” கொண்டாடப்பட்டது. அதாவது வழக்கமாக திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் ஆரோக்கியத்திற்காகவும் நல்வாழ்வுக்காகவும் நாள் முழுவதும் எந்த ஒரு உணவும் சாப்பிடாமல், தண்ணீர் உட்பட குடிக்காமல், விரதம் இருந்து சந்திரனையும் பின்னர் தங்கள் கணவரின் முகத்தையும் சல்லடையில் பார்ப்பார்கள். அதற்கு பிறகே பெண்கள் விரதத்தை பூர்த்தி செய்து, உணவு அருந்துவார்கள்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் குஜராத்தைச் சேர்ந்த கஷ்மா பிந்து, மிக சுவாரசியமாக கர்வா சௌத் பண்டிகையை கொண்டாடியுள்ளார். அதாவது இவர் கடந்த ஜூன் மாதம், பரோடாவில் உள்ள தனது இல்லத்தில் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமணத்திற்கு பல விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் இவர் திருமணத்திற்கு பிறகு, முதல் முறையாக கர்வா சௌத் பண்டிகையை கொண்டாடியுள்ளார். அதற்கான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
யாருக்கும் கிடைக்காத குடுப்பணை ரஜினிக்கு கிடைச்சிருக்கு.., ரிஷிகேஷ் பயணத்தின் போது நடந்த சம்பவம்!!
அதாவது சல்லடை மூலம் கண்ணாடியில் தன் பிரதிபலிப்பை கஷ்மா பிந்து பார்ப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில், அவரே பதிவிட்டுள்ளார். அதில் சிவப்பு நிற புடவை, தோற்றத்திற்கு ஏற்றவாறு நகைகளையும் அணிந்து தேவதை போல் தோற்றமளித்திருந்தார். மேலும் “இன்று கர்வா சௌத் கொண்டாடப்பட்டது, நான் கண்ணாடியில் என்னைப் பார்த்தேன், என் இழந்த பெருமையைப் பார்த்தேன், மகிழ்ச்சியான கர்வா சௌத்” என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.